நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த குமரகுருபரன், செய்தி விளம்பரத்துறை இயக்குனராக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று, ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், அவரது இடமாற்றம், அனைத்து தரப்பினர் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் முழுவதும், பூங்கா, போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்தவர், மாவட்ட கலெக்டர் குமரகுருபரன்.
நாமக்கல் மக்களின் குறைகளை அறிய சமூக வலைத்தலமான FACEBOOK ல் Namakkal Collector என்ற பெயரில் கணக்கை தொடங்கி மக்களின் குறைகளை கேட்டரிந்தார், தன்னுடைய தனிப்பட்ட முயற்சியில் மக்களின் குறைகளை அறிந்து உடனடியாக அதன் மீதுநடவடிக்கை எடுத்தார்.
மக்களே நேரடியாக குறைகளை FACEBOOK ல் பதிவு செய்தனர். தற்போது அதில் உறுப்பினராக 1037 பேர் உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, பல புகார்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த மாவட்ட கலெக்டர் குமரகுருபரன், இடமாற்றம் செய்யப்பட்டார் என்ற செய்தி நாமக்கல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் கலெக்டர் சகாயம், குமரகுருபரன் போன்ற நேர்மையானவர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்படுவது, மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்றுமொரு நல்ல உள்ளம் படைத்த சாதனையாளரை நம் நாமக்கல் இழந்துள்ளது. உங்கள் பணி சிறக்க நாமக்கல் மக்களின் வாழ்த்துக்கள்.